மல்யுத்த வீரர் ‘கிரேட் காளி’ பாஜக.வில் இணைந்தார்: பஞ்சாபில் பிரச்சாரம் செய்கிறார்

புதுடெல்லி: பிரபல தொழில்முறை மல்யுத்த வீரர் தலிப் சிங் ராணா. மல்யுத்தத்தில் புகழ்பெற்ற ராணா, அன்புடன் கிரேட் காளி என்று அழைக்கப்படுகிறார். இந்நிலையில், டெல்லி அலு வலகத்தில், மூத்த தலைவர் கள் முன்னிலையில், கிரேட் காளி நேற்று பாஜக.வில் இணைந்தார்.

இதுகுறித்து கிரேட் காளி கூறும்போது, ‘‘நாட்டுக்காக பிரதமர் மோடி செய்து வரும் பணிகளால், அவர்தான் சிறந்த பிரதமர் என்று உணர்கிறேன். அதனால், நாட்டின் வளர்ச்சிக்காக அவர் எடுக்கும் பணிகளில் நானும் பங்கேற்க வேண்டும் என்ற உணர்வில் பாஜக.வில் இணைந்திருக்கிறேன்’’ என்றார்.

இவர் கடந்த 2000-வது ஆண்டில் மல்யுத்த விளையாட்டுகளில் ஈடுபட தொடங்கினார். அதன்பின் டபிள்யூ டபிள்யூ இ சாம்பியன் பட்டம் வென்றார். தவிர 4 ஹாலிவுட் படங்கள், 2 பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

பஞ்சாப் போலீஸ் அதிகாரியாக கிரேட் காளி பணியாற்றி இருக்கிறார். அதனால், வரும் 20-ம்தேதி பஞ்சாபில் நடைபெற உள்ளதேர்தலில் பாஜக.வுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

முன்னதாக விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தவர் கிரேட் காளி என்பது குறிப்பிடத்தக்கது.

– பிடிஐ

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.