ராஜபாளையம்: வெளியூரில் இருந்து துக்க வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோக முடிவு

ராஜபாளையம் அருகே துக்க வீட்டுக்கு வெளியூரில் இருந்து வந்திருந்த பெண், கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்தம்மாள். தற்போது திருமணமாகி தனது கணவர் மாரிமுத்துவுடன் கரூரில் வசித்து வருகிறார். இவர், தனது சகோதரன் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
image
இந்நிலையில் தன்னுடைய உறவினர்கள் சிலரை அழைத்துக் கொண்டு அருகே உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது சரிவர நீச்சல் தெரியாமல் கிணற்றில் குளித்த முத்தம்மாள், திடீரென தண்ணீரில் மூழ்கத் தொடங்கியுள்ளார். இதை அறிந்த உடன் சென்ற பெண்கள் உதவிக்கு மற்றவர்களை அழைத்து வரும் முன்னர் முத்தம்மாள் முழுவதுமாக மூழ்கி உயிரிழந்தார்.
image
இதனை அடுத்து மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்தவுடன், அவர்கள் கிணற்றுக்குள் இருந்த முத்தம்மாளை சடலமாக மீட்டனர். தகவல் அறிந்து வந்த தெற்கு காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.