வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த பாம்பு.. உயிரைப் பணையம் வைத்து பாம்பைக் கொன்ற வளர்ப்பு நாய்கள்.. <!– வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த பாம்பு.. உயிரைப் பணையம் வ… –>

புதுச்சேரியில் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை, இரண்டு வளர்ப்பு நாய்கள் சேர்ந்து கடித்துக் கொன்று உரிமையாளர்களை காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மூலக்குளத்தைச் சேர்ந்த ரமணி – சித்ரா தம்பதி ராட் வீலர் வகையைச் சேர்ந்த 2 நாய்களை வளர்த்து வருகின்றனர்.

இரண்டில் ஒரு நாய் கடந்த சில தினங்களாக சோர்ந்து காணப்பட்டுள்ளது. மருத்துவரிடம் அழைத்துச் சென்று வந்த பிறகும் நாய் சோர்வாகவே காணப்பட்ட நிலையில், மொட்டை மாடியில் உடலில் காயங்களுடன் கண்ணாடி விரியன் பாம்பின் உடல் கிடந்ததை உரிமையாளர்கள் பார்த்துள்ளனர்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, முந்தைய நாள் இரவில் கண்ணாடி விரியன் பாம்பு உள்ளே வந்ததும், இரு நாய்களும் போராடி அதனைக் கடித்துக் கொன்று, உடலை மொட்டை மாடிக்குத் தூக்கிச் செல்வதும் பதிவாகி இருந்தது.

மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது நலமாக உள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.