#BREAKING : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை-தமிழக அரசு.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலன்று ஊழியர்களின் ஊதியம் பிடிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது.

இதில், ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சி அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மையம், விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றனர். தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யக் கூடாது என்றும் உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.