அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!

மாநிலத்தின் வளர்ச்சிக்காக தொலைதூர பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தெலங்கானா
மாநிலம் ஜான்கோன் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அம்மாநில முதலமைச்சர்
சந்திரசேகர ராவ்
பேசியதாவது:

மாநிலத்தில் உள்ள
அரசு ஊழியர்கள்
, அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கடமை உணர்ச்சி காரணமாக கடந்த ஏழு ஆண்டுகளாக அனைத்துத் துறைகளிலும் நமது மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதற்காக அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசுடன் கைகோர்த்து அரசு ஊழியர்கள் பணியாற்றினால் மாநிலத்தின் வளர்ச்சி மிகச் சிறப்பானதாக இருக்கும். நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள், தெலங்கானா மாநில அரசு ஊழியர்கள் என்ற செய்தி கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. நகர்ப்புறங்களில் மட்டும் வளர்ச்சி இல்லை. கிராமப்புற மற்றும் குக்கிராமங்களிலும் பல மடங்கு வளர்ச்சி காணப்பட்டுள்ளது.

இது அரசு ஊழியர்களின் ஒத்துழைப்பாலேயே சாத்தியம். மண்டல அமைப்பு மற்றும் பணியாளர்கள் ஒதுக்கீடு தொடர்பான பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும். மேலும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக தொலைதூர பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்க, தலைமைச் செயலாளர் சோமேஷ் குமாருக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு ஊழியர்களுக்கு
சிறப்பு ஊதியம்
வழங்கப்படும் என, முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்து உள்ளதால், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.