ஆப்கானிஸ்தான் சூழ்நிலை அண்டை நாடுகளுக்கு கவலைக்குரியது – மத்திய அரசு

புதுடெல்லி,
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, அந்நாட்டில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபப்ட்டுள்ளன. மேலும், அந்நாட்டின் பொருளாதார சூழ்நிலையும் மிகவும் மோசமடைந்து வருகிறது.

இதற்கிடையில், கடந்த மாதம் இந்தியா-மத்திய ஆசியா நாடுகள் இடையே சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தியா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கஜகஸ்தான், உஸ்பகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்றன. இந்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.  
இந்நிலையில், இந்தியா – மத்திய ஆசிய நாடுகள் இடையே ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் நடைபெற்ற கூட்டம் தொடர்பாக மக்களவையில் இன்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகிதா ராய் கேள்வி எழுப்பினார். 
அதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை-மந்திரி முரளிதரன், ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக இந்தியா-மத்திய ஆசியா நாடுகள் இடையேயான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் சூழ்நிலை அண்டை நாடுகளான இந்தியா மற்றும் மத்திய ஆசியா நாடுகளுக்கு கவலைக்குரியது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.