பஜாஜ் குழுமத்தின் தலைவர் ராகுல் பஜாஜ் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

டெல்லி: இந்தியாவின் முன்னணி தொழில் குழுமம் பஜாஜ். இந்த நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் ராகுல் பஜாஜ். இவர் உடல் நலனைக் காரணம் காட்டி பஜாஜ் குழுமத் தலைவர் பதவியிலிருந்து ராகுல் பஜாஜ் கடந்தாண்டு விலகினார். இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலமானார். இவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முன்னணி தொழில் அதிபர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 83 வயதான ராகுல் பஜாஜ் நாட்டின் மிக உயரிய விருதான பத்ம பூஷண் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பிரதமர் மோடிராகுல் பஜாஜ் மறைவுக்கு, பிரதமர் மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘ஸ்ரீ ராகுல் பஜாஜ் ஜி வர்த்தகம் மற்றும் தொழில் உலகிற்கு அவர் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக நினைவுகூரப்படுவார். வணிகத்திற்கு அப்பால், அவர் சமூக சேவையில் ஆர்வமாக இருந்தார் மற்றும் ஒரு சிறந்த உரையாடலாளராக இருந்தார். அவரது மறைவால் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் ராகுல் பஜாஜ் மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘திரு. ராகுல் பஜாஜ் அவர்களின் மறைவு குறித்து கேள்விப்பட்டு ஆழ்ந்த வருத்தம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.