புரோ கபடி லீக்: உ.பி.யோத்தா, புனேரி பால்டன் அணிகள் வெற்றி..!

பெங்களூரு,
12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் மற்றும் அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 45-27 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை தோற்கடித்து வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா மற்றும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 41-34 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 
இன்றைய ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்-தபாங் டெல்லி (இரவு 7.30 மணி), யு மும்பா- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 8.30 மணி), தெலுங்கு டைட்டன்ஸ்- புனேரி பால்டன் (இரவு 9.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.