பெங்களூரு – மைசூரு நகரங்களை இணைத்து சென்னைக்கு புல்லட் ரயில்; ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: சென்னை – பெங்களூரு – மைசூரு நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்குவது குறித்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமான கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில், ‘டெல்லி – வாரணாசி, மும்பை – நாக்பூர், மும்பை – ஐதராபாத் உள்ளிட்ட 8 புதிய புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்க ஆய்வு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை – பெங்களூரு – மைசூரு நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில்  வழித்தடங்களை உருவாக்குவது குறித்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து  வருகிறோம்’ என்றார். மும்பை – அகமதாபாத் வழித்தடத்தில் புல்லட் ரயில் இயக்கப்படும் என்று ஒன்றிய அரசு ஏற்கெனவே அறிவித்தது. டெல்லி – அகமதாபாத், டெல்லி – அமிர்தசரஸ், வாரணாசி – ஹவுரா நகரங்களை இணைக்கும் வகையிலும் புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.