#Breaking : அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்..!

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்

மன்னார் வளைகுடாபகுதியில் ஏற்பட்ட வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக   கன்னியாகுமரி தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி காரைக்கால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான இதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் தென் தமிழக மாவட்டங்கள் வட கடலோர மாவட்டங்கள் திருச்சி அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மன்னார் வளைகுடா மற்றும் குமரிகடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.