இலங்கையில் அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்திற்குள் தேர்தல்



அடுத்த வருடம் பெப்ரவரிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய மற்றும் கொலன்னாவ பிரதேசங்களில் இடம்பெற்ற கறுவாப் பட்டை வழங்கும் நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள மக்கள் பேரணியின் இரண்டாவது பேரணி மாத்தறையில் நடைபெறவுள்ளதாகவும்  இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலாவது மக்கள் பேரணி அண்மையில் அனுராதபுரத்தில் இடம்பெற்றதுடன், இவ்வாறான பேரணிகளை ஏற்பாடு செய்வதற்கான காரணங்கள் குறித்தும் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இதன்போது கருத்து வெளியிட்டுள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.