சமந்தாவை மரண கலாய் கலாய்த்த மாஜி கணவர்

சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். நான்காவது திருமண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் அறிவித்தனர்.

விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பிறகு இன்ஸ்டாகிராமில் இருந்து நாக சைதன்யாவின் புகைப்படங்களை நீக்கினார்
சமந்தா
. மேலும் விவாகரத்து குறித்த அறிவிப்பையும் நீக்கினார். தேவையில்லாத விஷயங்கள் வேண்டாம் என்று நீக்கிவிட்டாராம்.

இந்நிலையில் நாக சைதன்யாவுடன் இருந்தபோது சமந்தா போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் பற்றி பேசப்படுகிறது.

2020ம் ஆண்டு மே மாதம் நடந்த நடிகர் ராணா, மிஹீகா பஜாஜின் ரோக்கா நிகழ்ச்சியில் எடுத்த நாக சைதன்யாவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, என் புருஷன் ரொம்ப ஹேன்ட்சம் தானே என்றார்.

அதை பார்த்த நாக சைதன்யாவோ, இது காசு கொடுத்து போட்ட போஸ்ட் மாதிரி இருக்கிறதே என கலாய்த்தார்.

அது பற்றி தற்போது சமூக வலைதளத்தில் பேசப்படுகிறது. சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் சேர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களின் ஆசை நிறைவேறாது போன்று.

பிரிவுக்கு பிறகு வேலை விஷயமாக இருவரும் ஒரே இடத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆனால் பேசாமலேயே தங்கள் வேலையை மட்டும் பார்த்துவிட்டு அவரவர் காரில் ஏறிச் சென்றுவிட்டார்களாம்.

Ajith:இது அஜித்துக்கு முதல்முறை: வலிமை தயாரிப்பாளர் போனி கபூர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.