“மம்தா போன் செய்து ஆளுநரின் அத்துமீறல் குறித்து கவலை தெரிவித்தார்” – மு.க.ஸ்டாலின் ட்வீட்

மாநிலங்களின் உரிமைகளைக் காக்க திமுக துணை நிற்கும் என மேற்குவங்க முதல்வரிடம், தமிழக முதல்வர் உறுதியளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போன் செய்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேற்கு வங்க ஆளுநர் செயல்பாடு குறித்து பேசினார். அப்போது மம்தா பானர்ஜியிடம் பேசிய மு.க.ஸ்டாலின், மாநிலங்களின் உரிமைகளைக் காக்க திமுக துணை நிற்கும் என உறுதியளித்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் ஆளுநர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக மம்தா வருத்ததாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து, பாஜக ஆட்சியில் இல்லாத மாநில முதல்வர்களின் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க மம்தா யோசனையளித்திருப்பதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
image
ஏற்கெனவே, மேற்கு வங்க சட்டப்பேரவை கூட்டத் தொடரை ஒத்திவைத்து அந்த மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் பிறப்பித்த உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு மேற்கு வங்க அரசின் பரிந்துரைப்படியே கூட்டத் தொடரை ஒத்திவைத்ததாக மாநில ஆளுநர் ஜகதீஷ் தங்கர் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர், தமிழக முதல்வரிடம் தொலைபேசியில் உரையாடியது முக்கியத்துவம் பெறுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.