மாநிலத்தின் சுயாட்சியை காக்க திமுக என்றும் துணை நிற்கும்- மம்தாவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு <!– மாநிலத்தின் சுயாட்சியை காக்க திமுக என்றும் துணை நிற்கும்-… –>

மேற்கு வங்க மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரை ஆளுநர் முடக்கியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அவருடன் மம்தா பானர்ஜி தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர், பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் சட்ட வரம்புகளை மீறி செயல்படுவதாக மம்தா கவலை தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாநிலத்தின் சுயாட்சியை காக்க திமுக என்றும் துணை நிற்கும் என்றும், டெல்லி அல்லாத இடத்தில் விரைவில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்களின் கூட்டம் நடத்தப்படும் என்றும் மம்தாவிடம் தெரிவித்ததாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.