5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் வரும் மே மாதம் நடைபெற வாய்ப்பு <!– 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் வரும் மே மாதம் நடைபெற வாய்ப்பு –>

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் வரும் மே மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

5ஜி அலைக்கற்றைக்கான ஏல பரிந்துரையை மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் விரைவில் வழங்க உள்ளது.

இந்நிலையில், மார்ச் மாதத்தில் ட்ராய் பரிந்துரை அளிக்கும்பட்சத்தில், 2 மாதத்தில் ஏலம் நடைபெறும் என தொலைத்தொடர்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜி சேவையை விட 10 மடங்கு அதிக பதிவிறக்க வேகத்தை 5ஜி கொண்டிருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அத்துறை குறிப்பிட்டுள்ளது.

5ஜி அலைக்கற்றை ஏலம் இந்த ஆண்டிலேயே நடைபெறும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.