அக்காவும், தம்பியும் போதும்: யோகி ஆதித்யநாத் கலாய்!

மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. உத்தரக்காண்ட், கோவா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப்பிரதேசம், உத்தரக்காண்ட், கோவா, பஞ்சாப், மனிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் ஆட்சியை கைபற்ற பாஜக,
காங்கிரஸ்
ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்த நிலையில், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியை அழிக்க பிரியங்கா, ராகுல் காந்தி ஆகியோரே போதும் என்று சாடியுள்ளார். “ஏற்கெனவே இங்கு காங்கிரஸ் கட்சிக்கு பெரிய வாய்ப்பும், எதிர்காலமும் இல்லை. அப்படியிருக்க அக்காவும், தம்பியும் சேர்ந்து அதை இன்னும் கீழே இழுத்துச் செல்வார்கள். காங்கிரஸின் அழிவிற்கு ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காதியும் மட்டுமே போதும் என்று அண்மையில் உத்தரக்காண்ட் சென்ற போது அம்மாநில மக்களிடம் பேசியதை இப்போது நினைவு கூர்கிறேன்” என்று அந்த பேட்டியில்
யோகி ஆதித்யநாத்
தெரிவித்துள்ளார்.

“இந்தியா, அரசியல் சாசனப்படி ஆளப்படுமே தவிர இஸ்லாமியர்களுக்கான ஷாரியத் சட்டத்தின்படி ஆளப்படாது.
முஸ்லிம்
மகளுக்கான மாண்பை உறுதி செய்யவே நமது தேசம் அரசியல் சாசனப்படி ஆளப்படுமே தவிர ஷாரியத் சட்டத்தால் அல்ல என்று கூறுகிறோம். நமது
பிரதமர் மோடி
, முத்தலாக் முறையை ரத்து செய்தார். இதனால் முஸ்லிம் மகள்களின் உரிமை காக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான மரியாதையை மாண்பை பிரதமர் உறுதி செய்துள்ளார்.” என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

தலிபான் மனப்பான்மை கொண்ட சில மதவெறியர்களின் எண்ணங்கள் என்றுமே நிறைவேறாது என்று தெரிவித்த யோகி ஆதித்யநாத், இது புதிய இந்தியா; இந்த புதிய இந்தியா உலகம் இருக்கும்வரை அரசியல் சாசனப்படி மட்டுமே ஆளப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.