இலங்கையில் தினசரி 6 மணிநேர மின்வெட்டு! வெளியான பகீர் தகவல்



நீர் மின் உற்பத்தியுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் நீரை கொண்டு இரண்டு வாரங்களுக்கு மாத்திரமே மின் உற்பத்தியினை மேற்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

ஏப்ரல் மாதத்திற்குள் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்படாவிட்டால் தினசரி 6 மணிநேர மின்வெட்டு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு மின்சார நுகர்வோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு,



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.