இலங்கை அணிக்கு எதிரான ரி 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி 20 போட்டியில் சூப்பர் ஓவரில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

சிட்னி மைதானத்தில் நேற்று (13) நடைபெற்ற இந்தப் போட்டி முடிவில் இரு அணிகளும் தலா 164 ஓட்டங்கள்  பெற்றதனால் போட்டி சமநிலையில் இருந்தது. இதனால் இரு அணிகளுக்கும் சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சூப்பர் ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 5 ஓட்டங்களை பெற்றது. இதனை தொடர்ந்தாடிய அவுஸ்திரேலிய அணி 3 ஆவது பந்திலேயே வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது. இதனைதொடர்ந்து 165 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 08 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள்  பெற்றிருந்தது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் அவுஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.