ஐ.எஸ்.எல் கால்பந்து: மும்பை சிட்டி அணி வெற்றி..!

கோவா,
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி மற்றும் ஒடிசா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஒடிசா அணியை வீழ்த்தி மும்பை சிட்டி அணி தன்னுடைய 7-வது வெற்றியை பெற்றது.
இந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி சார்பில் இகோர் அங்குலோ, பிபின் சிங் ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர். மேலும் ஒடிசா அணி சார்பில் ஜோனதாஸ் டி ஒரு கோல் அடித்தார். 
இதையடுத்து மும்பை சிட்டி அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.