செல்போனால் விளைந்த விபரீதம்.. சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர்..!

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவருடன் செல்போன் மூலம் பழக்கம் ஏற்ப்பட்டது.

செல்போனில் அந்த சிறுமியுடன் தொடர்ந்து பேசிவந்த அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி சிறுமியை திடீரென காணவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் உகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிறுமியை கடத்தி சென்றது அந்தோணி ராஜ் என்பதை உறுதி செய்தனர்.

இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறுமியை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தை ஒப்புகொண்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் செல்போன்களை எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.