தஞ்சை: குத்தகை விதிகளுக்கு மாறாக கட்டப்பட்ட 4 கட்டடங்கள் இடித்து அகற்றம்

தஞ்சாவூரில் குத்தகை விதிகளுக்கு மாறாக கட்டப்பட்ட கட்டடங்கள் இடித்து அகற்றப்படுகின்றன.
பழைய பேருந்து நிலையம் அருகே, குத்தகை அடிப்படையில், சுதர்சன சபா இயங்கி வந்தது. ஒப்பந்த காலம் முடிந்த நிலையில், அங்கு ஆளுங்கட்சியினர் சிலர், மதுபானக் கடை மற்றும் பார் வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் 20கோடி ரூபாய் ஒப்பந்த தொகை செலுத்தப்படாமல் இருந்துள்ளது.
image
இதனால், இடத்தை கைப்பற்றிய மாநகராட்சி அதிகாரிகள், அங்கிருந்த 4 கட்டடங்களை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மதிப்பு நூறு கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.