தஞ்சை மாணவி மரணம் தொடர்பான அரசின் மேல்முறையீட்டு வழக்கு!: தந்தை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!!

டெல்லி: தஞ்சை பள்ளி மாணவி மரணம் தொடர்பான அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அவரது தந்தைக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. பள்ளி மாணவி மரண விவகாரம் வேண்டுமென்றே அரசியல் ஆக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.