தனுஷ் செய்வதையே செய்யும் ஐஸ்வர்யா: இது எங்க போய் முடியப் போகுதோ

காதல் கொண்டேன் படம் பார்க்க சென்ற இடத்தில் தனுஷை பார்த்து காதலில் விழுந்தார்
ஐஸ்வர்யா
. இதையடுத்து இரு வீட்டாரும் சேர்ந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்துவிட்டனர். பிரிவுக்கு பிறகு அதில் இருந்து கவனத்தை திசை திருப்ப படங்களில் நடித்து வருகிறார்
தனுஷ்
.

பிரிவை அறிவித்த கையோடு வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்தார். தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார்.

என்னை தேடி வந்த ‘முசாபிர்’, இந்த கனெக்ஷன் தப்பாகாது: ஐஸ்வர்யா
தனுஷை போன்றே ஐஸ்வர்யாவும் தன் கவனத்தை திசை திருப்ப வேலை பக்கம் திரும்பியிருக்கிறார். இயக்கத்திற்கு பிரேக் விட்டிருந்த ஐஸ்வர்யாவோ, தனுஷை பிரிந்த கையோடு காதல் பாடல் வீடியோவை இயக்கியிருக்கிறார்.

தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க இரு வீட்டாரும் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் அவர்களோ அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் வேலை தான் முக்கியம் என்று இருக்கிறார்கள்.

இந்த பிரிவு முடிவை அவசரப்பட்டு எடுக்கவில்லையாம். பல ஆண்டுகளாக யோசித்து தான் எடுத்திருக்கிறார்களாம். பிரிவு குறித்து தனுஷும், ஐஸ்வர்யாவும் ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டதே ரொம்ப லேட் என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகலாம் என்று அவர்கள் பல காலமாக காத்திருந்தார்களாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.