பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு



பொரளையில் உள்ள அனைத்து பரிசுத்தவான்கள் தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்ட அவர்  கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அவரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.