கோயம்புத்தூரில் பத்திர எழுத்தர் முன் விரோதம் காரணமாக படுகொலை.! <!– கோயம்புத்தூரில் பத்திர எழுத்தர் முன் விரோதம் காரணமாக படுக… –>

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பத்திர எழுத்தர் ஒருவர் முன் விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சரவணம்பட்டியை சேர்ந்த பத்திர எழுத்தர் பொன்னுசாமி என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை முத்துக்குமார் என்பவருக்கு 50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு  பவர் எழுதிக்கொடுத்துள்ளார்.  சில நாட்களுக்கு முன்பு பணத்தை திருப்பி கொடுத்து பவர் பத்திரத்தை இரத்து செய்த நிலையில், அவரை தொடர்பு கொண்ட முத்துக்குமார் பேச வேண்டுமென அழைத்ததால் நல்லாம்பாளையம் சென்றுள்ளார்.

அங்கு முத்துக்குமார் மற்றும் அவரது நண்பர் ராஜன் ஆகியோர் பொன்னுசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியால் அவரை வெட்டியதாகக் கூறப்படுகிறது.சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததையடுத்து தப்பியோடிய இருவரும் துடியலூர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.