ஹாங்காங்கில் 3 வயது குழந்தைக்கும் கொரோனா தடுப்பூசி!| Dinamalar

ஹாங்காங் : ‘மூன்று வயது குழந்தைகளுக்கும் இன்று(பிப்.,15) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்’ என, ஹாங்காங் அறிவித்துள்ளது.

நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், ‘ஒமைக்ரான்’ வகை தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஐந்து வயது குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று முதல் மூன்று வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2 ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி அளிக்கப்படுகிறது. மாலை ஆறு மணிக்குப் பின் அனைத்து கடைகளையும் மூட உத்தரவிட்டு இருப்பதால், காய்கறி கடைகள், சலூன்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஹாங்காங் மக்கள் தொகையில் குழந்தைகளை தவிர்த்து இதுவரை 73 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.