தனுஷுடன் வாழ விருப்பமா? விவாகரத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த முதல் பேட்டி


விவகாரத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் என்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அண்மையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே அறிவித்தனர்.

இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் காதலர் தினத்தன்று ஐஸ்வர்யாவும் காதல் பாடலை வெளியிட்டிருந்தார்.

விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு பிரபல பத்திரிக்கைக்கு பேட்டியளித்த ஐஸ்வர்யா, காதல் என்பது ஒருவருடன் மட்டும் அடங்கி விடுவதில்லை. நான் என் பெற்றோர் பிள்ளைகளை காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த பேட்டியில் தனுஷ் குறித்து எந்தவித கருத்தையும் அவர் தெரிவிக்காதது பிரிந்து வாழும் முடிவில் ஐஸ்வர்யாக உறுதியாக இருப்பதாக கூறப்படுகின்றது.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.