தமிழக அரசியல் களத்தில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் – ஓபிஎஸ் <!– தமிழக அரசியல் களத்தில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் – ஓபிஎஸ் –>

மதுரை மாநகராட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பழங்காநத்தத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்தார்.

இதில் பேசிய அவர், ”ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் நீட் தேர்வை இரத்து செய்வேன் எனக்கூறினார். ஆனால் இன்று வரை நீட் இரத்துசெய்யப்படவில்லை. மேலும் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாகவும், நகைக்கடன்களை தள்ளுபடி செய்வேன் எனவும் கூறி ஏமாற்றிவிட்டார்.

தமிழக அரசியல் களத்தில் நிச்சயம் மாற்றம் வரும். புரட்சி ஏற்படும் எனக்கூறிய அவர், இவ்வளவு குறுகிய காலத்திலேயே மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தது திமுக அரசு தான் எனவும் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.