முதலமைச்சர் மற்றும் காவல்துறையை பற்றி அவதூறாக பேசியதாக சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு <!– முதலமைச்சர் மற்றும் காவல்துறையை பற்றி அவதூறாக பேசியதாக சி… –>

விழுப்புரத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 14-ம் தேதியன்று பழைய பேருந்து நிலையம் அருகே பிரசாரக் கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், முதலமைச்சர் மற்றும் காவல்துறையை பற்றி அவதூறாகவும், ஆவேசமாகவும் பேசியதாக விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசாரிடம் கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி புகாரளித்தார்.

அதன் அடிப்படையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது, உள்நோக்கத்துடன் அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் அநாகரீகமாக பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சிவி சண்முகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.