மூதாட்டி மரச்சட்டத்தால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ; ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது <!– மூதாட்டி மரச்சட்டத்தால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ; ஜ… –>

சென்னை அம்பத்தூர் பகுதியில் மூதாட்டி ஒருவர் மரச்சட்டத்தால் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளான்.

அயப்பாக்கம் அருகே கடந்த 14ஆம் தேதி இரவில் நிர்மலா என்ற மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த நிலையில், நள்ளிரவில் மரச்சட்டத்தால் அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

சிசிடிவி கேமராவில் பதிவான நபரை தேடி வந்த போலீசார், செவ்வாய்கிழமை நள்ளிரவில் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித் திரிந்த ஒரு நபரைப் பிடித்து விசாரித்தனர். ஜார்கண்டைச் சேர்ந்த பிராம் டுடு  என்ற அந்த நபர்தான் நிர்மலாவை கொலை செய்தவன் என்பது தெரியவந்தது.

சம்பவத்தன்று நள்ளிரவு குடிபோதையில் சுற்றித் திரிந்த பிராம் டுடு, திறந்துகிடந்த நிர்மலா வீட்டுக்குள் புகுந்து செல்போன், கைப்பை, நெத்திசுட்டி உள்ளிட்டவற்றை திருடியுள்ளான். சத்தம் கேட்டு எழுந்த நிர்மலாவை மரச்சட்டத்தால் அடித்துக் கொலை செய்ததாகவும் போலீசிடம் அவன் கூறியுள்ளான்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.