உ.பி.,ரயில் நிலையத்தில் உடைமைக்குள் 426 ஆமைகளை மறைத்து எடுத்துச் சென்ற நபர் கைது <!– உ.பி.,ரயில் நிலையத்தில் உடைமைக்குள் 426 ஆமைகளை மறைத்து எட… –>

உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் ரயில் நிலையத்தில் உடைமைக்குள் ஆமைகளை மறைத்து எடுத்து வந்த ஒருவனை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

ரயில் நிலையத்தில் போலீசார் பயணிகளின் உடைமைகளை சோதித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் தனது பைக்குள் 426 ஆமைகளை வைத்திருந்தான். இது தொடர்பாக அவனிடம் போலீசார் விசாரித்தபோது, மேற்குவங்கத்தில் அவற்றை விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்வதாக கூறியுள்ளான்.

இதையடுத்து அவனைக் கைது செய்த போலீசார், ஆமைகளை பறிமுதல் செய்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.