பஞ்சாப் நடிகரும் சமூக ஆர்வலருமான தீப் சித்து கார் விபத்தில் உயிரிழப்பு.! <!– பஞ்சாப் நடிகரும் சமூக ஆர்வலருமான தீப் சித்து கார் விபத்தி… –>

பஞ்சாப் நடிகரும் சமூக ஆர்வலருமான தீப் சித்து கார் விபத்தில் உயிர் இழந்தார். ஹரியானா மாநிலம் சோனாபட் அருகே அவர் சென்றுக் கொண்டிருந்த கார் லாரி மீது பலமாக மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

செங்கோட்டையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது தீப் சித்து, விவசாயிகள் செங்கோட்டையில் கொடி ஏற்றிய போது நிகழ்ந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக அவர் முழு மூச்சுடன் போராட்டங்களில் கலந்துக் கொண்டார். தீப் சித்துவின் எதிர்பாராத மரணம் பஞ்சாபில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.