Tamil News Today LIVE: 100% கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டிய கோவா

Petrol and Diesel Price: சென்னையில் 105-ஆவது நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamilnadu News Update: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று ஓய்கிறது. இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மீண்டும் விசாரணை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் தொடங்குகிறது. மார்ச் மாதத்துக்குள் விசாரணையை முடிக்க அந்த ஆணையம் திட்டமிட்டுள்ளது.

பரிசோதனை தேவையில்லை: தமிழகத்தில் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளதால் கொரோனா பரிசோதனை தேவையில்லாத ஒன்றாக ஆகிவிட்டது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

India News Update: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

கொரோனா காலத்தில் விதித்த கூடுதல் கட்டுப்பாடுகளை ரத்து செய்யுங்கள் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

உக்ரைனுக்கு அதிக விமானங்கள்

போர் பதற்றம் நிலவி வரும் உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்துவர அதிக விமானங்களை இயக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

Corona Update: உலகளவில் இதுவரை 41.78 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 34.11 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 58.66 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates

12:48 (IST) 17 Feb 2022
நீண்ட நாட்களுக்கு பிறகு பெரியளவில் ரசிகர்களுக்கு அனுமதி

20ம் தேதி நடைபெற இருக்கும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3வது டி20 கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்க பெரிய அளவில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது பி.சி.சி.ஐ.


12:46 (IST) 17 Feb 2022
என்.எஸ்.இ. முன்னாள் தலைமை நிர்வாகி வீட்டில் சோதனை

தேசிய பங்கு சந்தையின் முன்னாள் சி.இ.ஒ. சித்ரா ராமக்கிருஷ்ணாவின் சென்னை சேலையூர் மற்றும் அண்ணா சாலையில் அமைந்துள்ள வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சாமியார் ஒருவரிடம் ஆலோச்சித்து பங்குச் சந்தை தொடர்பான முடிவுகளை எடுத்ததாக அவர் மீது புகார்.


12:02 (IST) 17 Feb 2022
உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை

உக்ரைனில் உள்ள இந்தியர்களை அழைத்து வர எத்தனை முறை வேண்டுமானாலும் விமானங்களை இயக்கிக் கொள்ளலாம் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது


11:59 (IST) 17 Feb 2022
100% கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டிய கோவா

18 வயதுக்கு மேற்பட்ட 100% மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி கோவா அசத்தியுள்ளது. இதுவரை 11.6 லட்சம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுவிட்டதாக மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு


11:22 (IST) 17 Feb 2022
சசிகலா புஷ்பாவுக்கு நிபந்தனை முன் ஜாமின்

கணவர் ராமசாமி அளித்த கொலை மிரட்டல் புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பாவுக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 15 நாட்கள் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் தலைமறைவாக இருக்கக் கூடாது என்றும் நிபந்தனை


11:00 (IST) 17 Feb 2022
சென்னையில் ரூ.1.45 கோடி பறிமுதல்: ஆணையர் ககன்தீப் சிங் பேடி

சென்னையில் ரூ.1.45 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.


10:46 (IST) 17 Feb 2022
கூடுதலாக 45 தேர்தல் பறக்கும் படைகள்

நகர்ப்புற தேர்தலையொட்டி, சென்னையில் கூடுதலாக 45 தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் 90 பறக்கும் படைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.


10:45 (IST) 17 Feb 2022
தென்னப்பிரிக்க வீரருக்கு இன்று பிறந்த நாள்

தென்னப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் இன்று 38-ஆவது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு ரசிகர்களும், கிரிக்கெட் உலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


10:36 (IST) 17 Feb 2022
கோவை: மெழுகுவர்த்தி அளித்து வாக்கு சேகரிப்பு

கோவை மாவட்டம், அன்னூரில் மெழுகுவர்த்தி, சிலுவையுடன் கூடிய ஜெப மாலைகளை வழங்கி பாஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


10:24 (IST) 17 Feb 2022
விருதுநகர்: பச்சிளம் குழந்தை விற்கப்பட்டதாக புகார்

விருதுநகர் அருகே ஒரு வயது பச்சிளம் குழந்தை விற்கப்பட்டதாக புகார் வந்ததை அடுத்து, தாய் உள்பட 9 பேரை கைது செய்து சூலக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


10:23 (IST) 17 Feb 2022
தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.376 உயர்ந்து ரூ.37,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


10:03 (IST) 17 Feb 2022
முன்னாள் முதல்வர் பழனிசாமியை சாடிய அமைச்சர் எ.வ.வேலு

ரூ.1000 பற்றி பேச முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி உள்ளது அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.


09:44 (IST) 17 Feb 2022
ஈரோடு: திமுக வேட்பாளர் மாரடைப்பால் பலி

ஈரோடு அம்மாபேட்டை பேரூராட்சி 2-ஆவது வார்டு திமுக வேட்பாளர் சித்துரெட்டி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.


09:37 (IST) 17 Feb 2022
ஹைட்ரோகார்பன் திட்ட பாதிப்புகள்: அரசிடம் இன்று அறிக்கை

ஹைட்ரோகார்பன் திட்ட பாதிப்புகள் குறித்து அரசிடம் இன்று நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பிக்கிறது.

காவிரி டெல்டாவில் ஆய்வு செய்ய கடந்த ஆகஸ்ட் மாதம் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.


09:26 (IST) 17 Feb 2022
விரைவில் பெண்களுக்கு ரூ.1000-உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

விரைவில் பெண்களுக்கான உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


09:20 (IST) 17 Feb 2022
பிரபல ரவுடிக்கு எதிராக குண்டர் சட்டம்

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சிறையில் உள்ள படப்பை குணாவை ஓராண்டு தடுப்புக் காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


09:14 (IST) 17 Feb 2022
விரைவில் எனது சுயசரிதை: முதல்வர் அறிவிப்பு

எனது சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.


08:59 (IST) 17 Feb 2022
உ.பி. விபத்து: பிரதமர் மோடி இரங்கல்

உத்தரப் பிரதேசத்தில் திருமண கொண்டாட்டத்தின்போது கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.


08:58 (IST) 17 Feb 2022
உ.பி.: கிணற்றில் தவறி விழுந்து 13 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் விழுந்து 13 பெண்கள் உயிரிழந்தனர்.

திருமண கொண்டாட்டத்தில் கிணற்றின் பலகை மீது அமர்ந்திருந்தபோது அதிக பாரம் காரணமாக பலகை உடைந்து விழுந்ததில் 13 பேரும் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தனர்.


08:46 (IST) 17 Feb 2022
எந்தவித முன்னேற்றமும் இல்லை: அன்புமணி

2 கட்சிகள் ஆட்சியில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.


08:42 (IST) 17 Feb 2022
நீலகரி: யானையை தீ வைத்து கொன்றவர் நீதிமன்றத்தில் சரண்

நீலகிரி மாவட்டம், மசினகுடியில் யானையை தீ வைத்து கொன்ற வழக்கில், ஓராண்டாக தலைமறைவாக இருந்த விடுதி உரிமையாளர் ரிக்கி ரயான் நீதிமன்றத்தில சரணடைந்தார்.


08:40 (IST) 17 Feb 2022
எரிசக்தி தேவையை மறுப்பது வாழ்க்கை மறுப்புக்கு சமம் – பிரதமர் நரேந்திர மோடி

எரிசக்தி தேவையை மறுப்பது என்பது லட்சக்கணக்கானோருக்கு வாழ்க்கையை மறுப்பதற்குச் சமம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


08:28 (IST) 17 Feb 2022
தலித்துகளிடையே ஊடுருவ பாஜக முயற்சி: திருமாவளவன் தாக்கு

பாஜகவினர் தலித்துகளிடையே ஊடுருவ முயற்சிக்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.