நகர்ப்புற தேர்தல்: ஈவிஎம் வைக்கப்படும் "ஸ்ட்ராங் அறைகளுக்கு" 3 அடுக்கு பாதுகாப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறைகளுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் சென்று ஆய்வு செய்தார். அடையாறு மண்டலத்திற்குட்பட்ட 173வது வார்டில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட உள்ளதாகவும், ஒவ்வொரு மையங்களிலும் துணை ஆணையர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
image
வாக்குப்பதிவு இயந்திரங்கள் STRONG ROOM-க்கு கொண்டு சென்ற பிறகு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளதாகவும், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.