ஷங்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட நடிகை அஞ்சலி …! படகுழுவினருக்குள் ஏற்பட்ட தகராறு…!

ஷங்கர்
தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பான் – இந்தியா திரைப்படமாக இது தயாராகி வருகிறது. இந்தப் படம் குறித்த புதிய அப்டேட்டை
அஞ்சலி
வெளியிட்டுள்ளார்
.
ஷங்கர் நேரடியாக இயக்கும் முதல் தெலுங்கு படமான இதில்ராம் சரண் நாயகனாக நடிக்கிறார்.

கியாரா அத்வானி நாயகி. ஜெயராம்,
ரகுமான்
உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். படத்தின் தொடக்க விழாவை முன்னிட்டு வெளியிட்ட போஸ்டரில் ஷங்கர்,
ராம்சரண்
, ரகுமான் உள்ளிட்டவர்களுடன் நடிகை அஞ்சலியும் இடம்பெற்றிருந்தார். அவரும் இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

பிகினியில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த ரகுல் பிரீத் சிங்..! இளசுகளின் BPயை ஏத்தும் புகைப்படங்கள் வைரல்…!

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு புனேயில்தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஷங்கர் படப்பிடிப்பை நடத்தினார். சில தினங்கள் முன்பு இந்த படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்தப் படப்பிடிப்பு காட்சிகளை யாரும் இணையத்தில் வெளியிட வேண்டாம் என்று படக்குழுவினர் கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் அஞ்சலி இன்று வெளியிட்டுள்ள தனது சமூக வலைத்தள செய்தியில், ஷங்கர் படத்தின் படப்பிடிப்பிற்கு போய்க் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் இந்த ஷெட்யூலில் ஷங்கர் படத்தில் இணைய இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆர்சி15 என இந்தப் படத்தை தில் ராஜு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். படத்தின் பட்ஜெட் 170 கோடி என்கின்றன தகவல்கள். இந்தப் படத்தில் முதல் முறையாக ஷங்கருடன் எஸ்.தமன் இணைகிறார். அவர்தான் படத்திற்கு இசை. ஒளிப்பதிவு திரு. பொலிடிகல் ஆக்ஷன் திரைப்படமாக இது தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் கதையை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் எழுதியுள்ளார்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.