Dhanush:ஐஸ்வர்யா பற்றி சொன்ன 'அந்த 100 மேட்டர்' பொய்யா தனுஷ்?

தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் பிரிந்துவிட்டார்கள். அவர்களை சேர்த்து வைக்க இரு வீட்டாரும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.

ஆனால் மீண்டும் சேர்ந்து வாழ தனுஷும், ஐஸ்வர்யாவும் தயாராக இல்லையாம். இந்நிலையில் முன்பு ஒரு முறை பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா பற்றி
தனுஷ்
கூறியது எல்லாம் பொய்யா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அந்த பேட்டியில் தனுஷ் கூறியதாவது,

எனக்கு ஐஸ்வர்யாவிடம் பிடித்ததே அவரின் எளிமை தான். அவரின் தந்தை எளிமை என்று நினைத்தால், ஐஸ்வர்யாவை நீங்கள் சந்திக்க வேண்டும். அவர் தன் தந்தையை விட 100 மடங்கு எளிமையானவர்.

செய்யாத காரியத்திற்காக ஐஸ்வர்யாவை பாராட்டும் தனுஷ் ரசிகர்கள்
அனைவரையும் சரிசமமாக நடத்துபவர் ஐஸ்வர்யா. யாருடனும் நட்பாக பழகுவார். என் மகன்களுக்கு நல்ல அம்மா. அவர்களை நல்லமுறையில் வளர்த்து வருகிறார் என்றார்.

ரஜினியை விட 100 மடங்கு எளிமையானவர் ஐஸ்வர்யா என்று தனுஷ் சொன்னது பொய்யாக இருக்கும். மனைவி என்பதால் விட்டுக் கொடுக்காமல் பேசியிருப்பார் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.

தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிவு முடிவை அறிவித்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. ஆனால் அவர்கள் சேர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.