கர்நாடகாவில் பஜ்ரங் தளத் தொண்டர் கொலை – மூவர் கைது <!– கர்நாடகாவில் பஜ்ரங் தளத் தொண்டர் கொலை – மூவர் கைது –>

கர்நாடகத்தின் சிவமோகாவில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த இளைஞர் ஹர்சா கொலை தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு சிவமோகாவில் ஒரு கும்பல் ஹர்சாவை அரிவாளால் வெட்டிக் கொன்றது. ஹிஜாப் விவகாரம் தொடர்பாகக் கொல்லப்பட்டதாக இந்து இயக்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளதால் பதற்றம் எழுந்துள்ளது.

இதனால் சிவமோகாவில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹர்சாவின் உடல் கூறாய்வுக்குப் பின் பலத்த பாதுகாப்புடன் அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.