திருப்பூரில் தொடர்ந்து 3வது ஞாயிற்றுக்கிழமையில் நிகழும் 3வது கொலை..கைகள் கட்டப்பட்ட நிலையில், வெட்டுக்காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு.! <!– திருப்பூரில் தொடர்ந்து 3வது ஞாயிற்றுக்கிழமையில் நிகழும் 3… –>

திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் வெட்டுக்காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து 3வது ஞாயிற்றுக்கிழமையாக அரங்கேறி இருக்கும் கொலை சம்பவம் மாநகர மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திருப்பூர் காட்டன் மார்க்கெட் தினசரி சந்தைக்கு காலை வழக்கம்போல்  வந்த வியாபாரிகள், விநாயகர் கோவில் பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில், வெட்டுக்காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தைப் பார்த்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

விசாரணையில் அந்த நபர் தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பதும் பெயிண்ட்டிங் வேலை செய்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. சடலம் கிடந்த இடத்தில் மது பாட்டில்கள் கிடந்ததால் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகின்றனர்.

கடந்த 6ஆம் தேதி சூட்கேசில் பெண் சடலம் கிடந்தது, கடந்த 13ஆம் தேதி சதீஷ் என்ற இளைஞர் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட சம்பவம், தற்போது ஸ்ரீதரின் கொலை என கடந்த 3 ஞாயிற்றுக்கிழமைகளில் 3 கொலைகள் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.