Tamil News Today Live: 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது

Tamil Nadu News Updates: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு, இயந்திர கோளாறு போன்ற பல்வேறு காரணங்கள் காரணமாக தமிழ்நாடு முழுவதும் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. சென்னை மாநகராட்சியில் 2 வாக்குச்சாவடிகள், திருமங்கலம் நகராட்சியில் 1 வாக்குச்சாவடி, ஜெயங்கொண்டம் நகராட்சியில் 2 வாக்குச்சாவடி, திருவண்ணாமலை நகராட்சியில் 2 வாக்குச்சாவடி ஆகும்.

பெட்ரோல், டீசல் அப்டேட்

சென்னையில் 109 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91. 43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

மீண்டும் முதலிடத்தில் இந்தியா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டி-20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதன் மூலம், ஐசிசி டி20 தரவரிசையில் 6 ஆண்டுக்கு பிறகு மீண்டும் முதலிடத்திற்கு இந்தியா சென்றுள்ளது.

Live Updates

08:43 (IST) 21 Feb 2022
மருத்துவ கல்லூரியில் சேர இன்று கடைசி நாள்

எம்பிபிஎஸ் , பிடிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள். கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர மாலை 5 மணியுடன் அவகாசம் நிறைவு பெறுகிறது.


08:36 (IST) 21 Feb 2022
இந்து நிர்வாகி கொலை – சிமோகாவில் 144 தடை

கர்நாடகா சிமோகா நகரில் இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அசம்பாவிதங்களை தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


08:31 (IST) 21 Feb 2022
நாளை வாக்கு எண்ணிக்கை – மூன்றடுக்கு பாதுகாப்பு

தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.