”அதிமுக, பாஜக சேர்ந்தால் கொங்கு எங்கள் கோட்டை” – அண்ணாமலை பேட்டி

அதிமுகவும், பாஜகவும் இணைந்து தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என்றும், அது திமுகவின் கோட்டை இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் கவலைப்பட வேண்டாம். மக்கள் நலனுக்காக அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் பாஜக உறுதுணையாக இருக்கும். பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி; எங்களை தொடர்ந்து நம்புங்கள்.
image
பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் கவலையடைய வேண்டாம்; தொடர்ந்து பயணிப்போம். அதிமுக மிகப்பெரிய கட்சி. ஒரு தேர்தலில் பின்னடைவை சந்தித்ததும் அந்த கட்சியை இகழ்வது சரியல்ல. அதிமுகவும், பாஜகவும் இணைந்தால் கொங்கு எங்களுக்கு கோட்டையாக மாறிடும். அது திமுக கோட்டையல்ல” என்று தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.