’பருத்திவீரன்’ கார்த்தி சினிமாவில் 15 ஆண்டுகள்: காமன் டிபியை தெறிக்கவிடும் ரசிகர்கள்

நடிகர் கார்த்தி திரைத்துறைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆனதையொட்டி காமன் டிபி வெளியிட்டுள்ளார்கள் அவரது ரசிகர்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி கடந்த 2007 ஆம் ஆண்டு அமீரின் ‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம்தான் ஹீரோவாக அறிமுகமானார். அந்த ஆண்டு வெளியான படங்களில் பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் குவித்ததோடு பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. கார்த்தி, பிரியாமணி என ஒவ்வொருவரும் எதார்த்தமாக நடித்தார்கள் என்றால் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை உயிரோட்டமாக அமைந்து பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன.

என்னதான் நடிகர் சிவக்குமாரின் மகன் என்ற அடையாளம் இருந்தாலும் ‘பருத்தி வீரன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ’நான் மகான் அல்ல’, ‘மெட்ராஸ்’, ’சிறுத்தை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘கைதி’ என ஒவ்வொரு படத்திலும் வித்தியாமான கதைக்களங்களில் தன்னை பொருத்திக்கொண்டு சிறப்பான நடிப்பை வழங்கியதாலேயே தமிழின் முன்னணி நடிகரானார் கார்த்தி. அதுமட்டுமல்லாமல், விவசாயிகளுக்காக தனது உழவன் ஃபவுண்டேஷன் மூலம் பல்வேறு உதவிகளை செய்து நிஜத்திலும் ஹீரோ என்று பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

image

கார்த்தி ஹீரோவாக அறிமுகமான ‘பருத்தி வீரன்’ பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியானது. இதனால், அவர் சினிமாவுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆனதையொட்டி ரசிகர்கள் காமன் டிபியை வெளியிட்டு ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.