மெட்ரோவில் முக கவசம் கட்டாயம்| Dinamalar

பெங்களூரு:மெட்ரோ ரயிலில் முகக்கவசம் அணியாதோருக்கு நிறுவனத்தின் சார்பில் அபராதம் விதிப்பதை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மற்ற போக்குவரத்து வாகனங்களை விடவும், மெட்ரோ ரயிலில் வசதி இருப்பதால் பயணியர் முன்னுரிமை அளிக்கின்றனர்.மெட்ரோ ரயில் பெட்டிகளில் அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருப்பதால், சுவாச பாதிப்பு இருக்கும் பயணியர் சிரமப்படுகின்றனர். இருப்பினும் குறைவான துாரம் மட்டுமே பயணிப்பதால் சமாளிக்கின்றனர்.

சுவாச பிரச்னை இருப்போர் பலரும், மெட்ரோவில் செல்லும் போது முககவசம் அணியாமலும், முகத்தில் பாதி வரை அணிந்தும் செல்கின்றனர். அடைக்கப்பட்ட சூழலில் நோய் பாதிப்புக்கான தீவிரம் அதிகமாக இருப்பதால், கட்டாயம் முறையாக முகக்கவசம் அணிய வேண்டியது அவசியமாகும்.
இதனால் மெட்ரோ நிறுவனம் தற்போது பயணியர் முகக்கவசம் அணிவதில் தீவிரம் காட்டி உள்ளது. முகக்கவசம் அணியாமலும், அரைகுறையாக அணிந்திருந்தாலும் அவர்களுக்கு உடனடியாக 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.