சரிதான் ஏதோ சம்பவம் இருக்கு… ரஷியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு போன அலர்ட் மெசேஜ்!

உக்ரைன் மீது ரஷிய படைகள் 5வது நாளாக தாக்குதல் நடத்துகிறது. ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் ராணுவமும் கடுமையாக சண்டையிட்டு வருகிறது.

ரஷியாவின் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்ததுடன், உக்ரைனுக்கு உதவி செய்கின்றன. ரஷியாவுக்கு கடுமையான பொருளாதார தடைகளும் விதித்துள்ளன. இதற்கு பதிலடியாக ரஷியாவும் தடைகளை விதித்துவருகிறது.

இன்றோ, நாளையோ முடிவுக்கு வந்துவிடாதா என்று ஒட்டுமமொத்த உலகமே எதிர்பார்த்திருக்க, உக்ரைன் -ரஷியா போர் நாளுக்கு நாள் உச்சத்தை நோக்கி சென்றிருக்கிறது.

இத்தகைய பதற்றமான சூழ்நிலையில், ரஷியாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறும்படி அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே ரஷியாவுக்கு அமெரிக்கர்கள் யாரும் பயணிக்க வேண்டாம் என்று கூறிய நிலையில், தற்போது அங்குள்ள அமெரிக்கர்களையும் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

“யூதர் குலத்து சிங்கம்”.. சும்மாவா ஜெலன்ஸ்கியை தூக்கிப் பிடிக்குது அமெரிக்கா!

தர்போது நடைபெற்று வரும் போரில் உக்ரைனுக்கு ஆதராக அமெரிக்கா செயல்பட்டு வருவதன் எதிரவினையாக, ரஷிய பாதுகாப்பு அதிகாரிகளால் அங்குள்ள
அமெரிக்க குடிமக்கள்
துன்புறுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே முன்னெச்சரிக்கையாக அமெரிக்கர்கள் ரஷியாவில் இருந்து வெளியேறுவது நல்லது என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது..

முன்னதாக, ரஷியாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் பெலாரஸில் உள்ள தூதரகத்தை மூடிவிட்டதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. அத்துடன், ரஷியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களில், அத்தியாவசிய பணிகள் தொடர்பான பணியாளர்களை தவிர மற்ற ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வெளியேறும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.