4 வயது சிறுமி பாலியல் வழக்கு; குற்றவாளிகளுக்கு சாகும்வரை சிறை தண்டனை அளித்த நீதிமன்றம்!

மனநலம் பாதிக்கப்பட்ட 19 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு சாகும்வரை சிறை தண்டனை எனத் தீர்ப்பளித்துள்ளது ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண், தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

கருப்பச்சாமி

கடந்த 2017 ஆகஸ்ட் 24-ம் தேதி வீட்டில் அப்பெண் தனியாக இருக்கும்போது, அத்துமீறி நுழைந்த கருப்பசாமி என்பவர் அவரை பாலியல் வன்கொடுமை செய்தார்.

அந்தப் பகுதி மக்கள் உடனே காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க, அவர் மீது ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சுபத்ரா, குற்றவாளி கருப்பசாமிக்கு ரூ.13,000 அபராதமும், இயற்கையாக மரணம் அடையும்வரை சிறைத்தண்டனையும் அளிப்பதாகத் தீர்ப்பளித்தார்.

காஜா முகம்மது

இதே நீதிமன்றத்தில் சென்ற வாரம், கீழக்கரை பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன் 4 வயது சிறுமியை சிறார் வதை செய்த வழக்கில், விசாரணை முடிந்து காஜா முகம்மது என்பவருக்கு ரூ. 1,00,000 அபராதமும், சாகும்வரை சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.