பஞ்சாப்பில் காங்கிரஸ் தலைவிதியை மாற்ற முடியாது : மத்திய மந்திரி உறுதி

சண்டிகர்: பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20 ஆம் தேதி தேர்தல் நடை பெறுகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியின் பெயரை நேற்று ராகுல்காந்தி அறிவித்தார். இதற்கு அம்மாநில அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. காங்கிரஸின் அறிவிப்பு குறித்து பதிலளித்துள்ள மத்திய மந்திரியும், பஞ்சாப் பாஜக பொறுப்பாளருமான கஜேந்திர சிங் ஷெகாவத், ஏற்கனவே அழிந்து விட்ட கட்சியின் தலைவிதியில் இது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று கூறினார்.  இது குறித்து அவர் … Read more

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் இன்று பதில் அளிக்கிறார்

புதுடெல்லி: கடந்த மாதம் 31ம் தேதி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் துவக்க நாளான்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து மறுநாள் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  பின்னர் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் மத்திய அரசு குறித்து கடும் விமர்சனம் … Read more

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் – ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வில்மிங்டன்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் திட்டம் குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளதாவது: ரஷ்யா உக்ரைனை எந்த நாளும் ஆக்கிரமிக்கக் கூடும். உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பால் அதிக மனித உயிர் இழப்பு ஏற்படும்.  ஆனால் எங்கள் தயாரிப்புகள் மற்றும் எங்கள் பதிலின் அடிப்படையில், ரஷ்யாவிற்கும் அதிக ராணுவ இழப்பு ஏற்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.  உக்ரைன் தலைநகர் கெய்வை விரைவாகக் கைப்பற்றுவதற்கு ரஷ்யா … Read more

அமைச்சரவையில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் கர்நாடக முதல்வர் பொம்மை இன்று டெல்லி பயணம்: மேலிட தலைவர்களை சந்தித்து பேசுகிறார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார். அவர் பதவியேற்று 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் முழு அளவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வில்லை. இதனால் கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இந்த முறை அமைச்சர் பதவியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று மூத்த பாஜ எம்எல்ஏக்கள் முயன்று வருகின்றனர். இதற்காக தங்களுக்கு நெருங்கிய பழக்கமுள்ள தலைவர்களை சந்தித்து லாபியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாரிய, … Read more

விடைபெற்றார் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்; மும்பையில் அரசு மரியாதையுடன் உடல் தகனம்| Dinamalar

மும்பை, பிப். 7-‘இசைக்குயில், இந்தியாவின் நைட்டிங்கேல்’ என, வர்ணிக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், 92, உடல் நலக்குறைவால் மும்பையில் நேற்று காலமானார். மும்பையில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவையொட்டி இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிக்கவும், நாடு முழுதும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்க விடவும் மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. லதா மங்கேஷ்கர் உடலுக்கு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். ‘இசைக்குயில்’ லதா மங்கேஷ்கர் ஹிந்தி, மராத்தி, … Read more

வீரமே வாகை சூடும்

ஆறடி சூறாவளியாக சுழன்று சண்டையில் மிரட்டுவதும், 'சாக்லேட் பாயாக' காதலில் கலக்குவதும், பாசக்காரனாக சென்டிமென்ட்டில் உருகுவதும்… என படத்திற்கு படம் அவதாரம் எடுக்கும் விஷால் ஆக்ரோஷத்துடன் 'வீரமே வாகை சூடும்' என திரையை தெறிக்கவிட வருகிறார். அவருடன் ஒரு நேர்காணல்… * 'வீரமே வாகை சூடும்' என்ன கதைதான் உண்டு தன் வேலை உண்டு என வாழும் மிடில்கிளாஸ் பையன் பற்றிய கதை. சாமானியன் ஜெயிக்க வேண்டும் என சொல்லும் படம். 'பாண்டிய நாடு' விஷாலை படத்தில் … Read more

மத்திய அரசு அலுவலகங்களில் 100 சதவிகித பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும்

புதுடெல்லி, கொரோனா 3வது அலை காரணமாக மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவிகிதம் பேர் மட்டும் அலுவலகங்களுக்கு வந்து பணியாற்றினால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்போது கொரோனா தொற்று குறைய தொடங்கி உள்ளதால் மீண்டும் அனைத்து பணியாளர்களும் அலுவலகங்களுக்கு வந்து  பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த முறை செயல்படுத்தப்பட உள்ளது. இந்த தகவலை மத்திய மந்திரி டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

முதல் ஒருநாள் போட்டி : ஆலோசனை கூறிய கோலி! ரிவ்யூ எடுத்த ரோகித்..

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி கழற்றி விடப்பட்டார். இதையடுத்து, ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஒரு வீரராக அணியில் தொடரும் விராட் கோலியின் செயல்பாடு எப்படி இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தீவிர ஆலோசனை நடத்தினர்.  இதற்கு பதில் கிடைக்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. முதலில் வெஸ்ட் இண்டீஸ் பேட் செய்தது. அப்போது 22 ஓவரில் … Read more

லதா மங்கேஷ்கர் மறைவு: சிறந்த பாடகர்களில் ஒருவரை துணைக்கண்டம் இழந்துவிட்டது – இம்ரான்கான் இரங்கல்

இஸ்லாமாபாத், பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இன்று காலமானார்.  இந்தியாவின் இன்னிச்சைக்குயில்  என்று போற்றப்பட்ட அவருக்கு வயது 92. அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் 8-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவக்கும் விதமாக இரண்டு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இரண்டு நாட்களுக்கு தேசியக் … Read more