தந்தை, மகன் விசாரணைக் காவலில் இறந்தது தொடர்பான வழக்கு – காவலர் சாமதுரைக்கு இடைக்கால ஜாமீன்

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட காவலர் சாமதுரையின் தாயார் உயிரிழந்ததால் அவருக்கு மூன்று நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சாத்தான்குளம் கொலை வழக்கு: இதுவரை நடந்தது என்ன? - BBC News தமிழ்
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர் சாமதுரை, தமது தாயார் உயிரிழந்துவிட்டதாகவும் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஜாமீன் வழங்ககோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சாமதுரைக்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.