இடுப்பில் பட்டா கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மடக்கி பிடித்த போலீசார்.! <!– இடுப்பில் பட்டா கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞ… –>

சென்னை காவல் ஆணையர் அலுவலக வாயில் அருகே இடுப்பில் பட்டா கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் இருந்த டிபன்பாக்ஸ் கீழே விழுந்ததால் அதனை எடுக்க முயன்ற போது அவரது இடுப்பில் பட்டா கத்தி ஒன்று மறைத்து வைத்திருந்ததை பார்த்த காவலர்கள் உடனே அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அந்த நபர் பெரம்பூர் பேரக்ஸ் சாலை கேஎம் கார்டன் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பதும், கஞ்சா போதையில் இருந்ததும் தெரியவந்தது.

எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓப்பந்த அடிப்படையில் ஹவுஸ்கீப்பிங் வேலை பார்த்து வரும் கார்த்திக், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் வேப்பேரி காவல் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.