கர்நாடக மாணவர் நவீன் உயிரிழப்புக்கு நீட் தேர்வும் ஒரு காரணம்; மருத்துவ கனவை நிறைவேற்றவே நவீன் உக்ரைன் சென்றார்: குமாரசாமி ட்வீட்

கர்நாடகா: கர்நாடக மாணவர் நவீன் உயிரிழப்புக்கு நீட் தேர்வும் ஒரு காரணம் என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தனது ட்வீட்டரில் ட்வீட் செய்துள்ளார். பள்ளியில் நன்றாக படித்த 97% மதிப்பெண் பெற்ற மாணவன் நவீனுக்கு, இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டினார். தனது மருத்துவ கனவை நிறைவேற்றவே நவீன் உக்ரைன் சென்றார். நீட் தேர்வை வைத்து பயிற்சி மையங்கள் லாபம் பார்க்கின்றன என கூறினார். நுழைவுத் தேர்வுகளால் உயர்கல்வி என்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டு, ஏழைகளுக்கு மறுக்கப்படுகிறது என கூறினார். தகுதி என்ற போர்வையில் திறமையான, பொருளாதார ரீதியாக நலிவடைந்த கிராமப்புற மாணவர்களுக்கு அநீதி விதிக்கப்படுகிறது என தெரிவித்தார். நீட் தேர்வு பயிற்சி மையங்களின் பின்னணியில் இருப்பது யார்? என்பது தெரியவில்லை என கூறினார். பின்னணியில் மத்திய அரசு செயல்படுகிறதா என சந்தேகம் உள்ளது என கூறினார். மாணவர்களின் நலனுக்காக நீட் தேர்வை எதிர்த்து போராடிவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.