இந்தியா மீது "கேட்சா" சட்டம் பாயப் போகிறதா?.. கலர் கலரா "பிலிம்" காட்டும் அமெரிக்கா!

ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதைத் தொடர்ந்து இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா என்பது குறித்து அதிபர் ஜோ பிடன்தான் முடிவு செய்வார் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யாவை முடக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது அமெரிக்கா. ரஷ்யாவுக்கு எதிராக என்னவெல்லாமோ செய்து பார்த்து வருகிறது அமெரிக்கா. தனக்கு இணையாக ஒருவன் இருக்கிறானே என்ற எரிச்சல் அமெரிக்காவுக்கு. சோவியத் யூனியன் சிதறுண்டு உடைந்தபோது உள்ளூர மகிழ்ந்த நாடு அமெரிக்கா.

இப்படிப்பட்ட அமெரிக்காவுக்கு உக்ரைன் ரூபத்தில் ரஷ்யாவுக்கு எதிரான துருப்புச் சீட்டு கிடைக்கவே ஆட ஆரம்பித்து விட்டது அமெரிக்கா.
ரஷ்யா
மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்குப் பின்னர் ஆட்டு மந்தை ஆடாக சென்று கொண்டிருக்கும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை அறிவித்துள்ளன.

இந்த நிலையில் மறைமுகமாக இந்தியாவை மிரட்டும் வேலையில் இறங்கியுள்ளது அமெரிக்கா. ரஷ்யா – உக்ரைன் இடையிலான விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கிறது. உக்ரைனுக்கு எதிராக ஐநா. சபையில் 2 முறை கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்போதும் இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தது.

இதையடுத்து இந்தியாவை வழிக்குக் கொண்டு வரும் குசும்புத்தனத்தில் அமெரிக்கா இறங்கியுள்ளது. சீனா தேவையில்லாமல் அடிக்கடி இந்தியாவை சீண்டுவதாக சம்பந்தமே இல்லாமல் பேச ஆரம்பித்துள்ளது அமெரிக்கா. சீனாவுடன், நமக்கு பல காலமாகவே மோதல் இருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் பெரிதாக வாயைத் திறக்காத அமெரிக்கா தற்போது அதுவாக வந்து சீனாவை சீண்டுகிறது. அதாவது, சீன விவகாரத்தில் உங்களுக்கு நாங்கள்தான் துணை நிற்க முடியும் என்று மறைமுகமாக இந்தியாவுக்கு மெசேஜ் தருகிறது அமெரிக்கா.

அதிர வைக்கும் யுத்தம்.. ஒரே ஒரு பெண்.. இதுதான் புடினின் “போர்க் குழு”!

இந்த நிலையில் ரஷ்யாவுடன் இந்தியா எஸ் 400 ரக ஏவுகணைகளை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் போட்டுள்ள விவகாரத்தை இந்தியா கையில் எடுத்துள்ளது. ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் இந்தியா மீது “கேட்சா” சட்டத்தின் கீழ் பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா என்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பிடன் முடிவு செய்வார் என்று அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கேட்சா என்பது உலக நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிப்பது தொடர்பான சட்டம் ஆகும். தங்களுக்கு யாராவது சரிப்பட்டு வராவிட்டால், தங்களை மீறி நடந்தால் இந்த சட்டப்படிதான் அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். குறிப்பாக பொருளாதார தடை விதிக்கப்பட்ட நாடுகளான வட கொரியா, ஈரான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் யாராவது ஏதாவது பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் செய்து கொண்டால் கேட்சா சட்டத்தை தூக்கிக் கொண்டு வந்து விடும் அமெரிக்கா.

இதுகுறித்து அமெரிக்காவின், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை அமைச்சர் டொனால்டு லூ கூறுகையில், இந்தியா மீது தடை விதிப்பதா அல்லது விதி விலக்காக கருதி விட்டுவிடுவதா என்பது குறித்து அதிபர் ஜோ பிடன்தான் முடிவு செய்வார். இதில் அவர்தான் முடிவெடுக்க முடியும். அதில் வேறு யாரும் தலையிட முடியாது.

“இந்தாங்க டீ சாப்பிடுங்க.. அம்மாட்ட பேசுங்க”.. சரணடைந்த ரஷ்ய வீரர்.. அன்பைக் கொட்டிய உக்ரைன்!

அமெரிக்காவின் மிக முக்கியமான பாதுகாப்பு பங்காளி இந்தியா. இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இருப்பினும் ரஷ்யாவிடமிருந்து இந்தியா விலகியிருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ரஷ்யாவிடமிருந்து எந்த நாடாவது பாதுகாப்புத் தளவாடங்களை வாங்கினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ரஷ்யா மீது பொருளாதாரத் தடை அமலில் உள்ளதை யாரும் மறந்து விடக் கூடாது என்றார் அவர்.

உண்மையில் 2018ம் ஆண்டே இந்த ஏவுகணைகளை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் கையெழுத்தி விட்டு விட்டன. அப்போதே அமெரிக்கா இந்தியாவை மிரட்டி வந்தது. அப்போது டிரம்ப் நிர்வாகம் இருந்தது. இப்போது ஜோ பிடன் வந்தும் கூட அவர்களது புத்தி மாறவில்லை.

இதே ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடமிருந்து வாங்க துருக்கி ஒப்பந்தம் செய்தபோது இதே கேட்சா சட்டத்தின் கீழ் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து அடாவடி செய்தது அமெரிக்கா என்பது நினைவிருக்கலாம். இப்போது இந்தியா பக்கம் திரும்பியுள்ளது அமெரிக்கா. இந்தியா – ரஷ்யா இடையே காலம் காலமாக பாரம்பரியமான நட்பும், ஒத்துழைப்பும் இருந்து வருகிறது. இந்தியா அதிக அளவில்ஆயுதங்களை வாங்குவது ரஷ்யாவிடமிருந்துதான் என்பது நினைவிருக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.