உக்ரைனில் இரவில் ரஷ்யா தாக்குதல் நடத்தவில்லை! உக்ரேனியர்களே பாலியல் தாக்குதல் நடத்தினர்… பிரபலம் அதிர்ச்சி தகவல்



உக்ரைன் மக்களுக்கு உக்ரேனியர்களும் அச்சுறுத்தலாக இருப்பதாக எழுத்தாளர் கொன்சலோ லிரா கூறியுள்ள நிலையில் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆட்சி கொடுமையானது என்றும் சாடியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 8 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், உக்ரைன் மக்களுக்கு உக்ரேனியர்களும் அச்சுறுத்தலாக இருப்பதாக எழுத்தாளர் கொன்சலோ லிரா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோவில், உக்ரைனில் ரஷியா போர் தொடுத்த நிலையில் அதிபர் ஜெலென்ஸ்கி, உக்ரைனில் உள்ள குற்றவாளிகளை விடுதலை செய்து, அவர்கள் கைகளில் ஆயுதங்களை வழங்கியுள்ளார்.

குற்றவாளிகள் பலரும் உயர் ரக ராணுவ ஆயுதங்களுடன் வலம் வருகின்றனர். ஆயுதங்களை வைத்து அந்த குற்றவாளிகள் கொள்ளைச் சம்பவங்களிலும் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதிலும் ஈடுபடுகின்றனர்.


நேற்று இரவு உக்ரைனில் கீவ் நகரில் நடத்தப்பட்ட சில துப்பாக்கிச்சூடுகளை ரஷிய ராணுவம் நடத்தவில்லை. அந்த நேரத்தில் ரஷிய வீரர்கள் அந்த இடத்திலிருந்து 10 கிமீ தூரத்துக்கு அப்பால் இருந்தனர்.

அவர்களால் எப்படி கீவில் துப்பாக்கிச்சூடு நடத்த முடியும்?

உக்ரைன் குற்றவாளிகள் குழுவாக இணைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர். சொந்த பகைகளை தீர்த்தபிறகு அவர்கள் பொதுமக்களை குறிவைப்பார்கள்.

ரஷியர்களுக்கு எதிராக போர் புரிகிறோம் என்ற பெயரில் உக்ரைனில் இந்த குற்றவாளிகள் குழப்பத்தை உருவாக்குகிறார்கள்.

இது அபத்தமானது, பொறுப்பற்றது, ஸெலென்ஸ்கி தலைமையிலான ஆட்சி கொடுமையானது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.